Posts

Showing posts with the label Uncategorized

நம்மாழ்வார் சொல்லும் நான்கு ரகசியங்கள்!

Image
நம்மாழ்வார் சொல்லும் நான்கு ரகசியங்கள்! " உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்" இருளும் ஒளியும் சந்திக்கும் அதிகாலையில் விழிப்பு , தாவரங்களோடு உரையாடிக்கொண்டே பண்ணைத் தோட்டத்தில் ஒரு நடைப்பயிற்சி , கொஞ்சம் யோகாசனம் , கொஞ்சம் மூச்சுப்பயிற்சி என்று தன் நாளை ரம்மியமாய் ஆரம்பிக்கிறார் நம்மாழ்வார். 75 வயதிலும் 25 வயது இளைஞர்போல் உற்சாகமாக உழைத்துவரும் நம்மாழ்வாரிடம் ஃபிட்னெஸ் ரகசியம் பேசலாமா...   '' எனது ஆரோக்கியத்துக்கான அடிப்படைக் காரணம் என்னுடைய வாழ்க்கைமுறை. இது கிராமத்து வாழ்க்கை கொடுத்த பரிசு. தோட்டத்தில் , பண்ணையில் , மேடையில் என்று எங்காவது ஓரிடத்தில் உழைத்துக்கொண்டே இருப்பேன். உடல் நாம் சொல்வதைக் கேட்க வேண்டுமானால் , நான்கு விஷயங்களில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும். ஒன்று... பசி வந்து சாப்பிட வேண்டும் , இரண்டு... தாகம் வந்து தண்ணீர் அருந்த வேண்டும் , மூன்று... சோர்வு வந்து ஓய்வு எடுக்க வேண்டும் , நான்கு... தூக்கம் வந்து தூங்க வேண்டும். இந்த நான்கு விஷயங்களும் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமான விஷயங்க...